துவட்டிக்கொள்ளவியலாதபடி
முழுக்க நனைகிறது இதயம்..
பளீரென பிளக்கும் உன்
பார்வை மின்னல்கள்..
கண்டபடி ரசித்துச் சிரிக்கும்
இந்த காதல் மழை..
உன்னுள் நனைந்தபடி
தப்பிப் பிழைக்கும் இந்த
பாழும் உயிர்...
வெண்பா... :
மின்னலைக் கண்டஞ்சா மாவீரர் பேரெழில்
மின்னலைக் கண்டஞ்சல் காண்....
மின்னலுக் கஞ்சா திதயம் மிரளுமே
மின்னலைப் பார்வை கண்டு..