வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

நாணம்...

ஆழமான என்
நினைவுப் பள்ளங்களில்
உன்னைச்
சேமித்து வைத்திருக்கிறது காதல்...

காதல் மகரந்தத்தைத்
தட்டிப்பறிக்கவென்றே
வண்டாய் ரீங்காரமிடுகின்றன
உன் விழிகள்...

புன்னகைக்கும் இமைகள்
படபடத்தபடி
விழிகளாலேயே பேசிவிடுகிறாய்...

நீ அறிந்தே இருக்கிறாய்...
பேசுவதற்காகவோ..
புன்னகைக்கவோ அல்ல...
முத்தமிட்டுக்கொள்ளவே
இதழ்கள் படைக்கப்பட்டிருக்கின்றன...

காதல் ஒரு 
வெட்கமற்ற மழை....
இடம், பொருள், ஏவலின்றி
இதயத்தை உந்தித் தொலைக்கிறது...
ஆனால் நீயோ
வெட்கமழையில்
முகம்மூட முனைகின்றாய்...

இனி நீ
எதைத்தான் மறைக்கமுடியும்...?
காதலைத்தான் அந்தக்
கருவண்டுகள் ரீங்காரமிட்டுவிட்டனவே....!

என் வாழ்நாளின்
இறுதிக்காலம் வரை நீ
என்பதை என்னால்
அறுதியிட்டுக்கூற முடியும்...

ஏனென்றால்
முற்றுப்பெறவே முடியாத
வார்த்தைகளை உள்ளடக்கிய
கவிதை நீ..........