உன்னைச்
சிந்திக்கச் சிந்திக்கத்
தித்திக்கிறது வாழ்க்கை...
என் வாழ்நாளின்
மிகக் குறுகிய
வினாடிகளைச்
சுமந்துவந்தவள் நீ...
உன்னைப்போய்
வாழ்நாள் முழுக்க
சுமந்து தொலைக்கிறது
இதயம்...
அந்த மழைக்கால
நாட்களில் நான்
உன்னோடு பின்னியிருந்த
சிற்சில மணித்துளிகள்
கண்களின்
பனித்துளிகள் போல
என் ஒவ்வொரு
இரவிலும் விடியும்வரை
பொழிந்து கொல்கிறது...
முத்தமிடத் துடிக்கும்
தாக இதழ்களுடன்
உன் ஸ்பரிசத்தின்
மோக அரவணைப்பில்
சிக்கித் தவித்த
வினாடிகள்...
தித்திக்கும் அந்த
நினைவுகளின்
சோக அரவணைப்பில்
தனிமையாய் நான்...
என் வறண்ட
தனிமையில்
உன் நினைவுகளைத்
தூறலாக்கி
மகிழ்கிறது மனம்...
மழைக்கென ஏங்கிச்
சுடுமூச்சு விட்டபடி
காய்ந்து கிடக்கும்
நிலம்
திடீரென பூரித்து
வாய்பிழப்பதுபோல்
உன் நினைவுகள்.....
இது பரிசா....?
தண்டனையா...?
தனிமையில்
வாடிக்கிடக்கும் மனம்
உன் நினைவுகளைப்
பரிசாகவே
ஏற்றுக்கொண்டு
ஆற்றிக்கொள்கின்றன...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக