வார்த்தைகள் கண்ணீர்விட்டுக்
கதறியழும்போதுதான்
கவிதை பிறக்கிறது...
எந்த நெறிமுறைக்குள்ளும்
சிக்காமல்
எல்லா நெறிமுறைகளையும்
சிக்கலாக்கிவிட்டிருக்கிறது காதல்..
இதோ....
என் பாதையெங்கும்
அகலமறுக்கும் முள் மெத்தைகள்...
பதுங்கு குழிகளெனப்
பதுமையின் நினைவுகள்...
கனவு, கவிதை,
நினைவு, நிஜம்,
புனைவு, புதுமையென
சுமந்தும், சுவைத்தும்
துன்புற்றும், இன்புற்றும்
மகிழ்கிறது காதல்...
அதோ..
கண்ணெதிரே நீ நடந்து வரும்
அந்த அரூபப் பாதையில்தான்
சிந்தப்பட்டிருக்கின்றன....
மெல்லிய உன் பாதத்தை வருடியபடி
பரப்பி வைக்கப்பட்டிருக்கின்றன...
இந்த வாழ்க்கைக்கான தத்துவங்கள்...
வாழ்வின்
வெவ்வேறு திசைகளில் தோன்றிய
வெவ்வேறு தத்துவங்களின் சாராம்சமாய்ப்
பொலி(ழி)ந்து தள்ளுகிறது காதல்...
தெளிவாக நுகரமுடிகிறது...
என் வாழ்க்கைக்கான
உன்னத தத்துவம் நீ...!
எவர் மனதும் புண்படாத
அழகிய தத்துவம் காதல்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக