உன்னை நினைத்தாலே
என்னுள் துளிர்க்கிறதுதுள்ளலுடன் மகிழ்ச்சி...
மனதில் பெய்கிறது மழை...
அந்திமப்பொழுதின்
அர்த்தமிகு வெளிச்சத்தில்
அந்த மலைச்சாரலில்
சிறு மழைத்தூரல்...
நடந்து செல்கிறோம் நாம்
கடந்து செல்கிறோம்
சிலப்பல நூற்றாண்டுகளை....
உடைந்த நிலாவும்
ஒட்டாத சூரியனும்
முட்டாது நின்ற
மாலையில்
சிட்டாகப்பறக்கிறது
நம் சிறகுகள்....
சுதந்திரம் இன்னதென்று
சாலையில் போதித்தது
தந்திரத்துடன் மழைத்துளி....
இதுவரை நான் உன்னைத்
தீண்டியதில்லை - ஆனால்
நீ என்னைப்
பலமுறை தொட்டுப்பார்த்திருக்கிறாய்....
வானில் மின்னல்
மழை...
மனதில் மின்னல்
காதல்...
மின்னல் போல
பளீரிடுகிறாய்... உன்
பேரழகில் உறைந்து
வெளிரிப்போய் என் சருமம்....
சொட்டும் மழையில்
இதழ் சொட்டும் ஈரத்தில்
மூர்ச்சையாகிப்போனது
நான்தான்...
செவ்வாய்க்கிரகத்தில்
குடியேறுகிறது காதல்...
உன்
செவ்வாய்...?! கிறக்கத்தில்
அஸ்தமிக்கிறது
என் சூரியன்...
மொத்த காதலையும்
அள்ளித்தெளிக்கிறாய்...
முத்தம் கேட்ட வினாடிகளில்
மூச்சொறிந்து வெட்கத்தில்
இதழ்குவித்து
சத்தமின்றிப் புதைக்கிறாய்....
என் இதயத்தைப்
புதைகிறாய்....
மழையுடன்
மகிழ்ச்சியில் திளைந்த
அந்த மாலை...
இப்போது
விழிகளில் மழையுடன்...
உன் பிரிவு
ஏக்கத்தைக் கொடுக்கிறது...
என்
தூக்கத்தைக் கெடுக்கிறது....
மழை....
காதலை மட்டுமல்ல
கண்ணீரையும்
உலகுக்கு உரைக்கும்
கனல்......