வெள்ளி, 13 நவம்பர், 2009

மழைச்சாபம்...

விதிகளை மறந்த
சதியாய் விகசித்து
சிதறிக்கிடக்கின்றன
வெவ்வேறு திசைகளில்
துளிகள்...

என்காதல்
வறுமையால் வாடுகிறது..
உன் மழை
இளமையாய்ச் சாடுகிறது...

உன்னை
நினைப்பதுகூட
எனக்கு
ஆடம்பரமானதுதான்..

அழுத்தம் சிறிதுமற்று
மென்மையாய்க் காதலை
விதைக்க
எங்கிருந்து பழகிக்கொண்டாய்..?

புதைந்துதான் போனத்
மனம் - உன்
காதலில் தாக்கத்தினுள்..

தொட்டும் தொடாமல்
உன் மேல்
பட்டுவிட்ட காரணத்தால்
திக்குத் தெரியாமல்
வழிந்தோடுகிறது
மழைத்துளி....

உன்னைத் தெரியாமல்
தீண்டிவிட்டுதில்
தத்தளிக்கிறது
மழைச்சாரல்...
என் மனதில் தூரல்...

உன் பார்வை மது
அருந்திய மயக்கத்தில்
பிரம்மித்து உளறுகிறது
இடி மின்னல்...

அந்த

அந்திமப் பொழுதின்

இனிய
மழைக்காலத்தில்
சந்திக்கிறேன் உன்னை...

நாட்தவறாமல்
அரும்பாடுபட்டு
இத்தனை வருடங்கள்
உறங்கியும் உறங்காமல்
வளர்த்துவந்தாள்
என் அன்னை...
வெறும் என்னை...

ஆனால் நீயோ..
சந்தித்த சிலநொடிகளில்
சிந்தைகெடுத்துப்போனாய்...
குறுகிய காலத்தில்
குழந்தைபோல ஆக்கிவிட்டாய்...

என் இதழ்கள்
தூங்கும்போதும்
உன் பெயரையே
உச்சரிக்கின்றன..
கிளிப்பேச்சு இப்படித்தானென்று...
இப்பொழுதுதான் உணர்ந்தேன்..
எண்ணத்தில் நீ என்று...

பொறாமை கொண்ட மழை
சாபமிட்டது - உன்
பார்வை மழை அதற்கு
தூபம்போட்டது...

குளமாகியது கண்கள்...
இடிமின்னல் இதயத்தில்
நீ தொலைதூரம் சென்றதில்
கண்ணீர்வடிக்கிறது
காதல் மழை...

கண்ணீரும் மழைதான்..
ஏன்? எதற்கு? என்று
விளிக்காமலேயே வருகிறது...
விழிமுழுக்க நனைகிறது...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக