வெள்ளி, 13 நவம்பர், 2009

நீ வருவாயென...



வானம் கண்ணீர்
சிந்துகிறது...
மழை உருப்பெறுகிறது...
நான் கண்ணீர்
சிந்துகிறேன்..
கவிதை உருப்பெறுகிறது...
 
காரணம் நீதான்....
தோலுரிக்கப்பட்ட ஆடுபோல
தோரணம் கட்டப்பட்டது
செத்துப்போன இந்த உடல்...
 
என் மழைக்கால
நாட்களில் நீ
மேகமாய் வந்து
தேகம் நனைத்துப்போனாய்...
 
நீ பெய்தாய்..
நான் களித்தேன்..
நீ பொய்த்தாய்..
நான் புளித்தேன்...
கண்கள் பெய்தன
மழை...
 
உன் பார்வை
உச்சத்தில் பிரம்மைபிடித்து
பிச்சையெடுக்கிறது
என் காதல்...
இச்சையில் ஏங்கியே
துச்சமாகிப்போனது என்
மிச்ச இளமையும்
உன் ஸ்பரிசத்தால்...
 
உன் இதழ் படாமலேயே
எச்சமாகிப்போன
என் உயிரில்
மிச்சப்பட்டுப்போய் 
கொச்சையாக்கப்பட்டது
இந்த வாழ்க்கை...
 
நிச்சயமற்ற இந்த
சொச்ச உயிரும் உன்
உச்சத்திற்கு ஏங்கிப்போய்
நச்சரிக்கிறது....
 
நஞ்சை உண்டவனுக்கு
ஆயுள் சொற்பம் - காதல்
நஞ்சை உண்டவனுக்கும்
ஆயுள் சொற்பம்தான்...
 
மரணம்
சிதை மாற்றம்..
காதல்
வதை மாற்றம்...
 
மாற்றமொன்றுதான்
உலகமென உன் காதல்
பரிமாற்றத்திற்கென
இன்னமும்
காத்திருக்கிறது
வீணாகிப்போன என்
நிகிழ்காலம்...
 
உன் வரவினால்
மழைக்காலத்தில் தொடங்கியது
என்
பிழைக்காலம்...
 
உன்னைக் காதலித்ததுகூட
பிழையில்லை... ஆனால்
உன்னைக்கண்டது
என் முதல் பிழை...
அதுவே நான் செய்த
பெரும்பிழை...
 
உன் வருகைக்கென ஏங்கியே
புண்ணாகிப்
புரையோடிப்போனது வாழ்க்கை...
எல்லாம்
மண்ணாகிப்போனபின்னும்
மண்டியிட்டு வேண்டுகிறது காதல்...
நீ வருவாயென
உயிர் நனைப்பாயென...
(பெய்யும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக