காதலின் மொழி
பெரும்பாலும்
மௌனம்தான்...
விழிகள் நான்கும்
மௌனத்தால் மட்டுமே
பேசிக்கொள்கின்றன..
காதலை ஒட்டுமொத்தமாய்த்
தேக்கிவைத்து
ஒற்றைப் பார்வையாலேயே
பொழிவிக்கிறாய்....
கற்றைகற்றையாய் பல
நினைவலைகளைப் பாய்ச்சி
கணைதொடுக்கின்றன விழிகள்...
மின்னலாய்... இடியாய்...மழையாய்...
நனைகிறது காதல்....
அமைதியாய் என்னைக்
காயப்படுத்தி விளையாடுகின்றன
உன் இதழ்களும்..
குவிந்திருக்கையில் அழகு...
இதழ்விரிக்கையில் பேரழகு...
நீ உதட்டுக்குச்
சாயமிடுவதில்லை
உன் இதழின்
சிவப்பெழிலை
ஒற்றி எடுத்தே
உதட்டுச்சாயம்
தயாரிக்கப்பட்டிருக்கிறது...
பல சமயங்களில்
இதழ்கள் நான்கும்
இதழ்கள் நான்கும்
தங்கள் விரோதங்களை
பழிதீர்த்துக்கொள்கின்றன...
உன் கோபத்தின்
தாபங்களை
ஒற்றை முத்தத்தில்
இறக்கிவைக்கிறாய்...
அந்த ஒற்றை
முத்தத்தில் என்
சித்தம் கலங்கி
பித்துப்பிடித்து
அலைகிறேன்...
ஒவ்வொருமுறை நீ
இதழ்குவிக்கும்போதும்
கதகளியாடுகிறது மனது...
உன் முத்தத்தின்
மழைப்பொழிவில்
கிளர்ந்தெழுந்து
தீட்சை பெறுகின்றது
இந்தக் காதலெனும்
இன்பத்தீ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக